
வட்ட பொட்டு
சட்டப் போட்டு
கட்ட மாட்டு வண்டியோட்டி
கிட்ட,கிட்ட பேசி வரும்
ரட்ட மாடு போல
நாம
சேட்ட கீட்ட செஞ்சுருலமா?!ஆச மச்சான்
சேந்து நாம செல்வோம என் ஆச மச்சான்
சாட்டக் கையில் சொடக்குப் போட
ரோட்ட நியும் நொடியில் தாண்ட
பாத ஓரம் பாத்திருப்பேன்
சேனம் கட்டுன குதிரையாட்டம்
செல்வாய் நியோ கோட்ட போல
ரயிலு வண்டி தடம் போல
கைய கோர்த்து திரிவோமா
குயிலுகிட்ட தட்சணையா
அதன் குரலை வாங்கி வந்தேனே
வீட்டு ஓரம் மேட்டு மேல
வெதச்சிப்புட்டேன் சொற வேத
உன் மேனி மேலிருக்கும் மசுர எண்ணி
காணி நெலமெல்லாம் காஞ்சாலும்
தாகம் வந்து நா வறண்டாலும்
தண்ணி உத்த மறப்பேனா
கன்னி மனச கெடுத்தவனே
உன்ன எண்ணி நானும் ஏங்குறேன்
No comments:
Post a Comment