
ஆத்து மேட்டு கல்லு மேல
அழுக்கு விரட்டும் சின்னவாழ
காத்தும் நீரும் ஒன்னாக
சோப்பும் நொறையும் பூவாகும்
காகிதம் விளைஞ்ச கரையோரம்
கழுத ரண்டு மேயிஞ்சு நிக்க
அழுத வானம் மூக்க சிந்த
பொழுது பார்த்து காத்திருக்கு
மொழங்கால் தண்ணில முங்கி நின்னு
அலசிப் போட்ட துணியெல்லாம்
கெலச்சி விட்ட மயிரப்போல
வெடச்சி நிக்குது கஞ்சிப்போட்டு
கெணத்து தண்ணில வேக வச்ச
சோத்து வண்ணம் போலிருக்கு
அடிச்சு துவைச்சு காயப்போட்ட
வெள்ள சட்ட, வேட்டியெல்லாம்
தெருவோரம் நிக்கும் தள்ளுவண்டி
தக தகத்த நெருப்பக் கொட்டி
தண்ணி தெளுச்சி தடவி விட்டு
இழுத்து அமுக்கி இஸ்திரி போட
வித விதமான ஆடை எடுத்து
வீட்டுக்குள்ள மட்டும் போட்டுக்கிற
அப்பிடி இப்படி திரும்பி நின்னு
கண்ணாடி கிட்ட கேட்டுக்கிற
சிவப்புகர வேட்டி ஒன்னு சின்னதொர வீட்டுக்கும்
பச்சகர வேட்டி ரண்டு படலுக்கார உறவுக்கும்
மயிலு முந்தான பொடாவ மூனு மடுவுக்கர வீட்டுக்கும்
எண்ணி பிரிச்சு கட்டி வைக்க
ஊரு அழுக்கெல்லாம் உனக்குத் தெரியும்
வெள்ளாவி வச்சு மறைக்க முடியும்
அழுக்கா போன உன் வாழவா
யாரு துவைக்க வருவாங்க
vidhaiya vedichi, noola thirichi...
ReplyDeletethuniya pinna.... maarum aadaiyellam...
serumidatha poruthu thane sirappaguthu...
athu pola.. ungaloda kavithai... azhaga irukku...