Sunday, October 10, 2010

*மனசு ரண்டும் ஒன்னாச்சு














அடி
கரும்பு ருசியபோல
படி சோறு நீயும் பொங்கி
பிடி கவளம் பெசஞ்சி தந்து
மடி மேல மயங்க வைக்கும்
அடி மனசுல என வச்சவளே

மாராப்பு சுந்தரியே
என வீராப்பு அத்தனையும்
உன் விரல் கோதும்
கேராப்பு கரிசத்தில்
கோல சுத்தின கொடியாட்டம்
கால சுத்திக் கெடக்குதே

உன் பனி வெடுப்பு பாதத்துல
கட்டி தங்கம் கொழைச்சு வச்சு
பட்டிப் பாத்து பூசுவேன்
ஒட்டி வச்ச ஓவியமே
மண் குவள இடுப்புல
என் கவலை தொங்குதே

ராவுக்க ஓரம் என்னதான்
கவுக்க பாத்த கருவாச்சி
சாவுக்க மர தோப்புக்குள்ள
சொகுசு பல உருவாச்சு
மவுசு கொறையா உன்னாலே
மனசு ரண்டும் ஒன்னாச்சு

No comments:

Post a Comment