
சன்னல் கம்பிகளுக்கு
கண்ணிருந்தால்
சைகையை எல்லாம்
மொழிப் பெயர்ந்து
முன்னுரையையும்
என்னுரையையும்
உன்னிடமே
வாங்கி இருக்கும்

விதை விழாத
விலை நிலம் போல
நீ
இல்லாத
என்
வீட்டு சன்னல் கம்பிகள்
கதை பேச
சைகை இல்லாமல்
சதை இழந்த
உடலாகி
சாகக் கிடக்கிறது

சாலையோரம்
விழுந்துக் கிடக்கும்
பூக்களை மித்தித்து விடாமல்
தத்தி தாவி போகிறாய்
ஏக்க பெருமுச்சு விட்டு
எல்லா பூக்களும்
வாடுகின்றன
என்னைப்போலவே

வைக்கோல் கன்றுக்குட்டியாய்
உன்னை காட்டியே
கவிதை கறக்கிறேன்
என்னிலிருந்து

ஆத்து மேட்டு கல்லு மேல
அழுக்கு விரட்டும் சின்னவாழ
காத்தும் நீரும் ஒன்னாக
சோப்பும் நொறையும் பூவாகும்
காகிதம் விளைஞ்ச கரையோரம்
கழுத ரண்டு மேயிஞ்சு நிக்க
அழுத வானம் மூக்க சிந்த
பொழுது பார்த்து காத்திருக்கு
மொழங்கால் தண்ணில முங்கி நின்னு
அலசிப் போட்ட துணியெல்லாம்
கெலச்சி விட்ட மயிரப்போல
வெடச்சி நிக்குது கஞ்சிப்போட்டு
கெணத்து தண்ணில வேக வச்ச
சோத்து வண்ணம் போலிருக்கு
அடிச்சு துவைச்சு காயப்போட்ட
வெள்ள சட்ட, வேட்டியெல்லாம்
தெருவோரம் நிக்கும் தள்ளுவண்டி
தக தகத்த நெருப்பக் கொட்டி
தண்ணி தெளுச்சி தடவி விட்டு
இழுத்து அமுக்கி இஸ்திரி போட
வித விதமான ஆடை எடுத்து
வீட்டுக்குள்ள மட்டும் போட்டுக்கிற
அப்பிடி இப்படி திரும்பி நின்னு
கண்ணாடி கிட்ட கேட்டுக்கிற
சிவப்புகர வேட்டி ஒன்னு சின்னதொர வீட்டுக்கும்
பச்சகர வேட்டி ரண்டு படலுக்கார உறவுக்கும்
மயிலு முந்தான பொடாவ மூனு மடுவுக்கர வீட்டுக்கும்
எண்ணி பிரிச்சு கட்டி வைக்க
ஊரு அழுக்கெல்லாம் உனக்குத் தெரியும்
வெள்ளாவி வச்சு மறைக்க முடியும்
அழுக்கா போன உன் வாழவா
யாரு துவைக்க வருவாங்க

காதோரம் கெலஞ்ச முடி
கத கதையா பேசுதே
சுவரோர சேந்திருக்கும்
கவுலி சொல்லும் சகுனம் போல;
நீ எடுத்து முடியும் போது
இழுத்து சொருவுவ என்னையும் சேத்து
உச்சி கொண்ட மேலே ஒரு
பிச்சி பூவ நீயும் வைக்க
ஏர பூட்டி உழுதேனே
காரப் போட்ட வாசலெல்லாம்
ஊரு சனம் என்ன பாத்து
உச்சிக் கொட்டி கிசு கிசுத்ததே
பித்து பிடிச்சு அழையுரேனே
சத்துக் கேட்ட மனசாலே
நடவு நெடும் உன் வெரலுக்குள்
எறப்பும் ,பெறப்பையும் ஒளுச்சி வச்ச
சேத்துக்குள்ள உசுரக் கொஞ்சம்
சேத்து நடும் நேசக்காரி
நெடு நெடுன்னு வளந்து நிக்கும் பயிரெல்லாம்
நேத்திக்கடன் ஆடு போல கழுத்து சாய்ஞ்சு
காத்திருக்கே உன் வெரலாலே வெட்டுப்பட
பாக்கு வெத்தல மாத்தும் வர
போக்குக் காட்டி போறவளே
சாக்கு ஒன்னு கெடைச்சாலும்
உன்ன பாக்க மனம் ஏங்குதே
கெண்டைக்கால தொட்டு நிக்கும்
கர வச்ச கண்டாங்கி சேலையில
குறுக்கு மறுக்கா
கட்டம் போட்டு சுத்தி நிக்கும்
வண்ண வண்ண நூலப்போல
சின்ன சின்ன ஆசையெல்லாம்
வாழ எல குறுத்தப் போல
சுத்திக் கெடக்கு மனசுக்குள்ள
வெட்டி நீயும் எடுத்துப்போயி
வெரலாலே உசுர தெழுச்சி
காதல் சோறும் கவித கூட்டும்
பெசஞ்சி நீ திங்கையில
சோத்தோட என்ன சேத்து
விழுங்கும் உன் விரலுக்கடியில்
விரிஞ்சு கெடக்கேன்
தல வாழ எல போல

அடி கரும்பு ருசியபோல
படி சோறு நீயும் பொங்கி
பிடி கவளம் பெசஞ்சி தந்து
மடி மேல மயங்க வைக்கும்
அடி மனசுல என வச்சவளே
மாராப்பு சுந்தரியே
என வீராப்பு அத்தனையும்
உன் விரல் கோதும்
கேராப்பு கரிசத்தில்
கோல சுத்தின கொடியாட்டம்
கால சுத்திக் கெடக்குதே
உன் பனி வெடுப்பு பாதத்துல
கட்டி தங்கம் கொழைச்சு வச்சு
பட்டிப் பாத்து பூசுவேன்
ஒட்டி வச்ச ஓவியமே
மண் குவள இடுப்புல
என் கவலை தொங்குதே
ராவுக்க ஓரம் என்னதான்
கவுக்க பாத்த கருவாச்சி
சாவுக்க மர தோப்புக்குள்ள
சொகுசு பல உருவாச்சு
மவுசு கொறையா உன்னாலே
மனசு ரண்டும் ஒன்னாச்சு

வட்ட பொட்டு
சட்டப் போட்டு
கட்ட மாட்டு வண்டியோட்டி
கிட்ட,கிட்ட பேசி வரும்
ரட்ட மாடு போல
நாம
சேட்ட கீட்ட செஞ்சுருலமா?!ஆச மச்சான்
சேந்து நாம செல்வோம என் ஆச மச்சான்
சாட்டக் கையில் சொடக்குப் போட
ரோட்ட நியும் நொடியில் தாண்ட
பாத ஓரம் பாத்திருப்பேன்
சேனம் கட்டுன குதிரையாட்டம்
செல்வாய் நியோ கோட்ட போல
ரயிலு வண்டி தடம் போல
கைய கோர்த்து திரிவோமா
குயிலுகிட்ட தட்சணையா
அதன் குரலை வாங்கி வந்தேனே
வீட்டு ஓரம் மேட்டு மேல
வெதச்சிப்புட்டேன் சொற வேத
உன் மேனி மேலிருக்கும் மசுர எண்ணி
காணி நெலமெல்லாம் காஞ்சாலும்
தாகம் வந்து நா வறண்டாலும்
தண்ணி உத்த மறப்பேனா
கன்னி மனச கெடுத்தவனே
உன்ன எண்ணி நானும் ஏங்குறேன்

சாவதற்கு சத்தின்றி
வாழ்வதற்கு வக்கற்று
வட்டிக் கடைமுன்
வரிசையில் நிற்கும்
அடகு பாண்டமாய்
அன்றாடும்
உன்
எதிரில்
காதலோடு ....

காற்று வேலிக்கிடையே
சல்லடையிட்டு
இரட்டை சடை
பின்னலுக்கு முன்
பிசு,பிசுத்த
கூந்தலிடை காதிற்குள்
காற்று
கிசு,கிசுக்கிறது
வாயுவையும் வடிகட்டும்
என்
வலிகளை....

நெஞ்சமெல்லாம்
நெருஞ்சிப் பூக்க
பஞ்சத்தாலே
பால் மார்பும் ரத்தம் வத்த
வெளஞ்ச வயலெல்லாம்
வறண்டு கெடக்கு
ஒடச்ச சட்டிய
ஒதறி விட்டது போல
என்
அடிக்காலு பாதமாட்டம்
பாலம் பாலமா
பொலந்திருக்கு
நெல்லு நெறைய நின்ன நெலம்
பிள்ள இல்லா பொண்ண போல
பாற மாறி இறுகி போச்சு
இந்த பாழாப் போன
உரத்த போட்டு
பாவி என் மாரப் போல
மாறிப் போச்சு

முத்த முத்த தென்னமரம்
முட்டாய் காய்க்கும் சின்னமரம்
சப்பி தின்னப் பாக்கையிலே
சாவு விஷம் போலிருக்கே
சோறு தண்ணி போகலையே
சொணங்கி நான் படுக்கையிலே
தூக்கமெல்லாம் தொலஞ்சிப் போய்
துக்கம் சொமந்து வருகிறதே
கட்ட கட்ட கருப்புதட்டு
கல்கண்டான இரும்புத்தட்டு
கடிச்சு தின்னப் பாக்கையிலே
எட்டி கசப்பு போலிருக்கே
மூச்சும்,பேச்சும் மொறையா வரல
நெஞ்சும்,நெனப்பும் நெலையா இல்ல
மூவோலகம் தாண்டி போன
மொறமாமன் ஒன்ன எண்ணி
நட பொணமா நானிருக்கேன்
உசுரக் கொண்டு ஓடிவா என் தலைவா

நீ
போடும் ஒவ்வொரு கோலத்திற்கும்
ஒரு முத்தம் என்றேன்
வேண்டாம் போடா என்றாய்
அடுத்த நாள்
ஆயிரம் புள்ளிவைத்து
கோலமிட்டாள்
புள்ளிகள் போதுமா? என்றேன்
வாசல் போதவில்லை என்று
வார்த்தையை விழுங்கிய
வெட்கம் சிணுங்கியது

உன்
கனவுகளை எல்லாம்
காகிதமாக்கினேன்
மௌனங்களை எல்லாம்
மொழிப் பெயர்ந்தேன்
கற்பனைகளை எல்லாம்
கவிதையாக்கினேன்
சிணுங்களை எல்லாம்
தலைப்பாக்கினேன்
சிரிப்புகளை எல்லாம்
சித்திரமாக்கினேன்
முத்தத்தை
முன்னுரையாக்கி
சத்தத்தை
சமர்ப்பணம் செய்து
அடக்கத்தால்
பொருளடக்கம் போட்டு
துப்பட்டாவை
அட்டையாக்கி
பார்வையால்
பசைத் தடவி
கூந்தலில்
நூலெடுத்து
வெட்கத்தால்
தைத்து
நீயும்,நானும்
மட்டுமே நிறைந்திருக்கும்
சபையில்
நீ வெளியிட
நான் பெற்றுக்கொள்கிறேன்
நான் வெளியிட
நீ பெற்றுக்கொள்கிறாய்
நாம்
கைத்தட்டி
கரவோசம் எழுப்புகிறோம்

மழைக்கு
ஒதுங்கும்
குடைக்கு தான் தெரியும்
அவன்
அருகில் தான்
அதிகம் நனைகிறேன்
நானென்று

குனிந்து கோலம்
போடுகையில்
எதிரில்
நானிருப்பதை
அடிக்கடி
எச்சரிக்கும்
உன்
துப்பட்டா

உன்
கையில் விழுந்து
தெறிக்கும்
மழைத் துளிக்கும்
மலடு நீங்குகிறதே!
எத்தனை
மழலை துளிகள்
சிதறிப் பறக்கிறதே
சின்ன மழைத்துளி
குட்டிக் குழந்தைகளோடு

துப்பட்டாவில்
தலை துவட்டிவிடுகிறாள்
என்
பார்வைக் குறும்பால்
ஒற்றைக் கையால்

ஞாயிறு இரவின்
செல்லிடை பேசி சேட்டையால்
திங்கள் காலை
குறுந்தகவலாய்
ஒரு
குட்டிப் பரு

ஐந்தாறு
தாயமிட்டும்
அடுத்த கட்டம் கூட
நகரவில்லை
உன்னால்
வெட்டுப்பட

உன்
கால் விரல்
காம்பஸ் கருவியாகிறதே
வெட்க தரையில்

ஆங்கிலம் பேசும்
தமிழ் வாத்தியாராகிறது
உன் எதிரில்
என்
மொழி

விரல்
நக கண்ணிற்கும்
பார்வை வருகிறதே
உன்
கதவிடுக்கு
வெட்கத்தால்

நம்
கனவுகள்
கட்டிப் பிடித்து
சண்டையிடுகின்றன
யார் தூக்கத்தை
யார்க் கெடுப்பது என்று

தாவணி தலைப்பு,
தங்க சங்கிலி,
புத்தக நுனி,
பேனா முனையாகிறேன்
உன்
விரலுக்கிடையே
வெட்கம் செய்ய

ஊரெல்லாம் ஒறங்கி கெடக்க
என் மனசு கெறங்கி தவிக்க
சேறில்லா வயலப் போல
சோகமென் கயல நெனைக்க
நீ இல்லா தேசத்திலே
நானிருக்கேன் தீவுப் போல

உன்
பார்வை காற்றுப் பட்டு
என்
துப்பட்டா வேலி
அனிச்சை செயல் மீறி
தூர விலகி
தொல்லை செய்கிறதே

சிறு குழந்தை
சிக்கு புக்கு விளையாட்டாய்
துப்பட்டாவை
தொற்றியப் படியே
என்
காதல்

நீ
பூக்கடையை
குறுக்கிடுகையில்
பூக்கள் எல்லாம்
இரையோடு வரும்
தாய்க் குருவியை
கண்டு தாவும்
குஞ்சுக் குருவியாகிறது

துப்பட்டாவில்
தலை துவட்டிவிடுகிறாள்
என்
பார்வைக் குறும்பால்
ஒற்றை கையால்

உன்னிடம் பிடித்து
கண் என்றேன்,
கழுத்து என்றேன்,
நீயும்
ச்சீ போட
என்ற வெட்கத்தின்
இடை இடையே
அப்புறம்,அப்புறம்
என்கின்றாய்

பல கவிதைகளை
பார்வைக்கு வைத்தேன்
அனைத்தையும்
அள்ளி சாப்பிட்டு விடுகிறதே
உன்
ஒத்த பார்வை

உன்
கொலுசொலியை கேட்டதும்
பட்சிகளும்,பூச்சிகளும்
கத்துவதை விட்டு விட்டு
கைத்தாளம் போடுகிறதே

நீ
வீசி எறிந்த
கடிதமெல்லாம்
வால் முளைத்து,
நூல் முளைத்து
காதல் காத்தடியாகிறதே

காகித பென்சிலில்
கடிதம் எழுதி
அழிப்பானோடு
அனுப்பி வைக்கிறேன்
அழித்துக்கூட விடு
அனால்
கிழித்து விட்டதே

என்
கடிதம் எல்லாம்
ரப்பர் பந்து தான்
நீ
வீசி எரிந்தாலும்
திரும்பி வரும்
உன்னிடமே

விழிகள் கூட
வியர்க்காமல் இருக்க
இமை சாமரம்
கண் சிமிட்டி
காற்று வீசுகிறதோ !

நீ
ஒரு பூவை எடுத்து
தொடுக்கிறாய்
மற்றவை எல்லாம்
வரிசையில் வந்து நிற்கிறதே
பூவோடு சேர்ந்து
பூவும் மணக்கதானே செய்யும்

பெரியாரீய சீர் திருத்தத் திருமணப்
பேச்சின் இடையேதான்
நமக்குள்
ஒரு சிறு திருத்தம் நிகழ்ந்தது

என்
காதல் கடிதமும்,
காஞ்ச விவசாயி மனுவும்
ஒன்றுதான்
இரண்டுமே
நிராகரிப்பிலே

சன்னலோரம்
முட்டி மோதி
செத்துக் கிடக்கிறது
காதல் கல்லறைக்கு
குடைப் பிடிக்கும்
பேருந்து நிறுத்தத்தில்

கடிதம்,கவிதை
கைபேசி,
குறுந்தகவல்,
மின்னஞ்சல் ,
இந்த விஞ்ஞானம்
ஏதுமின்றி
விழி இடைக் காதல்
செய்வோம் வா

கரையான்களிடம்
கேட்டுப்பார்
உன்
பார்வைக்கு வராமல்
படிமங்களாய்
போன
செல்லரித்த
கடிதங்களை

உலகத்திலேயே
பெரிய மிருகம் எது ?
என்றாள்
திண்ணைக் குழந்தைகளிடம்
யானை என்று
குதிரை என்றும்
பல பதில்
பாவம்
உனக்கு தெரியவில்லை
காதலைவிட
பெரிய மிருகம் ஏது?

அடிக்கடி
என்
கண்ணில்
தூசு விழக் கூடாதா ?
நீ
ஊதி விடும் சாக்கில்
நண்பர்களின்
தூரப் பார்வைகளில்
வீரனாவேனே

பூங்காவினுள்
போனதுமே
யார்,யார் மடியில்
படுப்பது என்று
ஒரு சட்டைப்பிடி
எப்பதும் போல
நானே
விட்டுக் கொடுக்க
என்
சேலை தலைப்பு
செல்லமாய்
அடி கள்ளி என்று
காதை திருகும்

செல்லிடை பேசியில்
மொழி செய்யும்
அப்புறம்,அப்புறம்
என்ற வார்த்தைக்கு
அருஞ்சொர்ப் பொருளே
ஐ லவ் யூ தானே

உன்
கூந்தலுக்கு மட்டுமல்ல
உடலுக்கும்
இயற்கையில் மணமுண்டு
அலுவலகம்
செல்லும்போது
அனைவரும் கேட்பது
என்ன பிராண்ட்
பாடி ஸ்பிரே
போடுகிறீர் என்று

நீ
அலுவலகம்
செல்லும் போது
கதவும் ,சன்னலும்
கண் பொத்திக் கொள்கின்றன
காதல் சேட்டையால்

நீ
இல்லாத நாட்களில் ...
கோலம் போடுவதும் இல்லை
குனிந்து
வாசல் பெருக்குவதும் இல்லை
.....................................
தலையணை
போதாமல்
போர்வையை தேடுகிறேன்
.........................................
என்
படுக்கை பாறமாகிறது
நீ இருக்கும் நாட்களைவிட
பன் மடங்காய் ...
...........................................
சேலை
உடுத்துவது இல்லை
உன் விரல் குறும்பு இல்லா
ஏக்கபடுமே
என்
இடைவெளிகள்