
ஒரு நாள்
நீயும்,நானும்
நதிக்கரையின் ஓரம்
நாணல் மறைவில்
கசங்கிய காகிதமாய்..
நட்சத்திரமிடையே
காயும் நிலா...
மௌனமாய்
மொழியும்,நாமும்
கண்கள்...
பிரிவால் காய...
நகரம் தான்
நரகமென தெரிந்து
உன்
கண்ணீரின் விண்ணப்பம்...
"மறந்துவிட மாட்டாயே"...
என்
உடல் நிர்பந்தமாய்...
நகரத்தில்
மனமும்,நினைவும்
என்னவளிடமே...
இரண்டு வருட
கலைப்புகளுக்கு பின்...
வந்ததும்,வராததுமாய்...
என்
சொந்தகால் சேர்த்த
அவளுக்கான
என்
பரிசு பொருளோடு ...
ஆற்றங்கரை ,
ஆளில்லா மேடு,
எங்கள் சந்திப்பு இடங்களில்
நான்...,தேடல்...
மூன்று தெருவுக்கு அப்பால்..
காரவீட்டு
முன்வாசலில்...
கண்டெடுத்தேன்
நெற்றி புற வகிட்டில்
குங்கும பொட்டோடு
என் முன்னால்...அவள்
என்னவள் (இல்லை)
என்முன்னாள்...என்னவள்
"பெண்கள்
அழுவதிலும்,
அழவைப்பதிலும்
கெட்டிகாரிகள்"






































