Saturday, September 19, 2009

*பாறா கடிதம்




















(ஒரு காதலன் தன் காதலியை சந்தேக பட்டுவிடுகிறான்
அதனால் கோபம் கொள்ளும் காதலி படும் துன்பங்களை
வருந்தமுடன் தன் காதலனுக்கு ஒரு கடிதமும்,
அவள் கூந்தலின் ஒற்றை மல்லிகையும் தருகிறாள்
அதை பார்த்து அவனின் நிலையை வலியோடு சொல்லுகிறான்....)

ஒற்றை மல்லிகை...
என்
உயிரில் வாழ்ந்துகொண்டே
இருக்கிறது
பிரேதமானாலும்
என்
ஞாபகத்தில்...

வாழ்வில் கண்ட
முதல் சுகந்தமதனை
என்
நுரையீரல்
சுவாசித்து கொண்டே
இருக்கிறது...

விரித்த கடிதம்
என்னை
வீழ்த்திவிட்டது
விழியும்
அன்றுதான்
சுவாசிக்கும் என்று
தெரிந்தது...

விழியும்,
மனமும் கனக்க
என்
விரல்கள் கொஞ்சம் நடுங்க
உன்
வேதனை வரிகளில்
என்
ஜீவ கண்ணீர்த்துளிகள்...

விரக்தி
எனை
அறுவடை செய்ய முயல
உன்
வதனம் வந்து
எனை
ஆறுதல் படுத்தியது ...

என்னை
நானே..
ஏளனம் செய்த
இரவு நிசப்தம்
என்
வாழ்வில்
மறையா வடுவாய்...

வருத்தங்கள்
வரவுகளை மிஞ்ச
சந்தோஷ
செலவுகள் எட்டி
பார்க்கவில்லை ...

மனசாட்சியிடம்
மண்டியிட்டு
மன்னிப்பு கேட்க
காவு கேட்க காத்திருந்தவனாய்
மனசை
மயானமாக்கி
தனிமை தேசத்தில்
தண்டனைகள்
தந்தான்...

என்
தேம்பல் விளம்பரம் இல்லா
இதயத்தில் மட்டுமே
நாடகம் போட்டது
நயமாய்..
உதட்டின் மேடையில் ...

சமாதான தட்டை
நீட்ட...
நீ
மௌனத்தால்
வீசி விரட்ட...
என்
சுழ்நிலை
படிவங்களை நிரப்ப...

சற்று திரும்பி
போனால் போவது
பிழைத்துக்கொள்ளட்டும் என
தந்து விட்டாய்
மூன்றாம்பிறை
முறுவலை...

1 comment: