Monday, September 14, 2009

*மழை கால மாலை பொழுது ...




















வானம் வெறுமனே
கரும் போர்வையினுள்ளே
படுத்து கிடக்க
மேகம் பிழிதலின்றி
ஒரு
பெரிய
தர்மசங்கடத்துக்குட்பட்டு
பெய்யா
தொங்கி கொண்டிருந்த
ஓர் மாலை...
தார் சாலை
இடுக்கு வெறுமையை
கிளறிக்கொண்டே
பூர்த்தியாக...

சிறு பிள்ளை
கால் பந்தாட்ட
செய்கை சாயலின்
மொத்த குத்தகையினோடு ...

குப்பை தொட்டியின்
உமிழ்தல் சிந்தி
வழிந்திருந்த
கழிவு சருகை
கிளைத்து உலர்த்தி
தெரு சாலை ...
சிறகற்ற குப்பை பறவைகள்
பேதலிப்பின் கொரித்ததினால்
தலை தெரி முண்டியடிப்பில்...

தொப்பமாய் நனைந்த
தொல தொலத்த
ஆடையினை
கிச்சு கிச்சு மூட்டும்
சேட்டையில்...

புளுதி விரட்டலுக்கு
அச்சப்பட்டு
இமை தாழ்வாரமடைத்து
கண் பதுங்கி ,பிதுங்கி கசக்க...

காற்று வாக்கி ,
வாசலடைப்புகளும்
வாயில் வயிற்றில்
அடித்துக்கொண்டே
கூச்சலோடு...
சருகு புளுதி
வித்திறைத்து
விரசமோடு
யாத்திரை செய்யும்
வாயு "வன்" முறை ;

No comments:

Post a Comment