
தென்றல் செதுக்கிய
வண்ண சிற்பமே
வண்டு
வந்து உந்தன்
வயதை சொல்லும்
வாசனை சிறுமியே
துயிலில் நீ...
உன்னை
தென்றல் வந்து
தாலாட்டி
எழுப்ப ...
நீ
துயில்
களைந்து
பனித்துளியில்
முகம் கழுவி
சோம்பல்முரிப்பாய்...
வானவில்
நிறம் பகிர்ந்து
வண்ணம் தீட்டிய
பட்டாம்பூச்சியே ...
உன்னை முத்தமிட துணியும்
என் ஆவல் ...
உன்
அல்ப ஆயுலையும்
என்
முத்தங்கள்
கொறித்து தின்பதை
தடுக்கும்
என் எச்சரிக்கை
உன்
இறப்பில்
எத்தனையோ
கூந்தல் கல்லறைகள்
உயிர் பெற ...
என் படைப்பு சக்தியே
இந்த
இயலாதவனின்
விண்ணப்பம்...
இன்னும்
ஒரு முழு நாளை
நீட்டிப்பு
செய்வாயா ...
மறுநாளாவது
உயிர் வாழட்டும்
என்
மலர்கள்...
No comments:
Post a Comment