Tuesday, September 15, 2009

*பஞ்ச தானா உருவு...




















நோஞ்சான் காலணி
பாதரேகை
சேற்றில் பதிந்த தாரையாய்...
தரையும்,பாதமும்
நூல் இடைவெளியில்
ஒரு கால் "பாரகான்"
மறு கால் "லூனார்சு" என
தரையோடு
தாரையாய்...

ஒழுகும் கூரையாய்...
நிறைய
சன்னல் துளை
ஏற்ற கதவில்லா
தைத்தும் போத்தலோடு
வெளுத்த கந்தலோடும்...

தினம்
இரண்டா?ஒன்றா?
கணித்திட முடியா
பஞ்ச(கன)மோடு...

நாளையே வசிப்பிடம்
உறுதியிடும்
மழைக்கு
ஒண்டும்,ஒதுங்கும்
சிரமம்
விடிந்தும்
திசைகள் தேடும்
பிழைப்பில்
நாடோடி தனங்கள் ...

பேருந்து,நிலைய,நிறுத்தம்,
கோவில் முகப்பு
அம்மா... தாயே...
நம்
காதுகளையும்
அடைக்கும்
பட்டினிகள்...

நம் ஆடம்பர
பாதியை வழங்க
எத்தனையோ
அத்தியாவசியங்கள்
முழுமைபெறும்


No comments:

Post a Comment