Monday, September 14, 2009

*நட்சத்திரம்















எத்தனையோ
கண்ணகி கோபம்
உடைத்த
முத்து பரல்...

மல்லிகை செடி பெண்ணின்
கூந்தல்
உதிர்த்த
வெண் கூட்டம்...

கொல்லன் பட்டறையில்
தெறித்த
வெள்ளி சிதறல்...

கடற்கரை இணைகளின்
கைகள் இறைத்த
சோளபொறி...

கவிதை, கடித
முயற்சியில்
நிராகரிக்கப் பட்ட
காகித குப்பைகள்...

ஏழை கூரையாய்
வான கூரையிலும்
எத்தனை பொத்தல்கள் ...

ஏழை கூரையில்
பகலில்...
வான கூரையில்
இரவில்...


No comments:

Post a Comment