Thursday, April 23, 2009

*காதலி தேடுகிறேன்















மரகிளையின்
தேனை
புறங்கை
சுவைத்தலில்
எச்சில்
ஊரும் முடவனின்
நாவாய்...

பூங்காக்களை
மென்று தின்கின்ற
இனைகளிடையே...

ஒற்றை காலுடன்
ருசிக்கின்ற
காத்திருப்பில்
கொக்குகளாய்...

மர நாற்காலியின்
நிரம்புதலில்
நான்...
என்..
தனிமை...

துப்பட்டாக்கள்
தாவணி
நாகரீக ஜீன்ஸ் என...
பின் தொடருதலை
பூர்த்தி செய்யும்
என் பார்வைகள்...
தன்னை
வழுக்கட்டாயமாய்
நிரப்பி கொண்டு
திரும்ப...

மர நாற்காலியிலேயே...
என்
தனிமை
மீன்டும்...

No comments:

Post a Comment