Monday, September 14, 2009

*ஏகாந்தமானவன்














மீசை நக கீரலில்
என்
இதழ்களில்
ஊமை குருதி
சொட்டுகளை
உறிஞ்சி ருசிக்கும்
உன்
வேகமடா...

சமையலறை
"இடை"வெளிகளை
பாத்திரம் உருட்டும்
உன்
விரல் குறும்பில்
என் சிலிர்புகளடா...

உன்
மார்பு அறையில்
எனை
இறுக்கி...
கை கதவடைக்க
முச்சை நெரிக்கும்
அணைப்பு தண்டனையடா...

என்
குளியலறை ஆடைபோல ...
உன்
ஏகாந்த சைகையடா...
செய்கையடா..
என்னை
குற்றுயிரும் ,குலையுயிருமாய்
கலைத்து போடும்
உன்
தசாப்த மூச்சடா...


No comments:

Post a Comment