Tuesday, September 15, 2009

*கட்ட பஞ்சாயத்து








வார்த்தைகளை குதப்பும்
ஓர்
சிவந்த வாய்
எச்சிலாய்,
எரிச்சலாய்
தெறித்தது வாதி பிரதிவாதி
சர்சையின் இடையே ...

கண்ட காணா...
அசலையும்,நகலையும்
சலித்து,தெளித்து
வார்த்தை
தீர்பெழுதியது
ஓர்
ஆலமர நிழல்
நீதிமன்ற
மேலாடையில்லா
அரை நிர்வாண
சத்திய நீதிபதி

No comments:

Post a Comment