
சூழ்நிலைகளே...
கொஞ்சம்
சும்மா இருந்திருந்தால்
சந்தர்பங்கள்
சாகடிக்கபடிருந்தால்
என்
சகாப்தம்
உயிர் வாழ்ந்திருக்கும்?
பூத்து
குலுங்கி
சிரித்த காதல்
காய்ந்து
சருக்காய்
காலடியிலே....
முகவரி இல்லா
கிரகம்
சென்றவளே...
என்
வீட்டு தடம் மறந்து
அலைகிறேனடி
நீ
புதைந்த
நெஞ்ச மஞ்சத்தில்
பூச்செடி முளைத்துவிட்டதடி
மலரின்
மணமெல்லாம்
உன்
பெயர் சொல்லி
அழைக்குதடி
பெண்ணே
நீயும்,
நானும்
சந்தித்தால்
நீ
நிச்சயம்
இளைத்திருப்பாய்
பேச தோன்றா
விக்கி
விழியால்
விசாரிப்போம்
நலம்
நாம் கேட்க....
"சளி" பிடிக்கும்,
கண்ணில்
"தூசு" விழும் என
நடிப்பில்...மழுபளில்
நம்
அழுகை....
உன்
குழந்தை பெயரில்
நான் ;
வரட்டுமா!
விடைபெறலில்
சில்லுகளாய்...
துகள்களாய்...
மீண்டும்
மீண்டும்
உடைபட்டு போவோம் ;
No comments:
Post a Comment