Saturday, April 25, 2009

பிடிக்கும் ...













சின்ன சின்ன
பிரயதனங்களால்
உன் அம்மாவிடம்
நீ
செல்லமாய்
அடிவாங்கும்
சினுங்களை
பிடிக்கும் ...

மழை பெய்து
மர கிளையை
காற்று குலுக்கலின்
துளிகளாய்...
தண்ணீர்
எடுக்கையிலலே
தளும்பிய
நீர்
நனைத்த தாவணியை
நீ
உதறும் போது
சிதறும்
நீர் திவலையில்
உனோடு நானும்
சில்லிட
சிலிர்ப்பு பிடிக்கும்...

தலைக்கு குளித்து
உன் தாவணியை
நனைக்கும்
கூந்தல் சொட்டுகளை
கையில் ஏந்த
பிடிக்கும்...

நான்
குளிக்கும் போதுதான்
நினைவு வரும்
பல் துலக்க
மறந்தது
என்னை மறதி செய்த
உன் நினைவு பிடிக்கும்...

என் வசந்தகாரியே
காற்றை கொஞ்சம்
வடிகட்டி
தென்றலை மட்டும்
என் மீது
தீண்டசெயும்
உன் அக்கறை பிடிக்கும்...

வெளிச்சத்தை கருப்பாக்கி
உன் விழியின் ஒளியால்
என்னை மேயும்
உன் திருட்டு பார்வை
பிடிக்கும்...

உன் கனவு சிறையில்
கட்டிவைத்து
கற்பனைகளை
தாராளமாய்
தட்டிவிடும்
இரவை பிடிக்கும்...

உனக்காக
உறங்க முயன்று
விடியும்வரை விழித்திருந்து
விடிந்தபின்
உறங்கும்
உறக்கம் பிடிக்கும்...

No comments:

Post a Comment