Sunday, September 12, 2010

*நீ நம்ம ஊர்ல செத்திருந்தா...
















கெழக்கு வெளுக்க
கேப்ப கழி மணக்க
வர காப்பி
கையோட வாச பக்கம்
வந்து நின்னா
ரட்ட வீட்டு
செவத்த மூக்கன்
சலவ சட்ட போட்டுகிட்டு
எத்தி எத்தி எங்கோ போக..
கத்தி சாண கருவாயன்
சுருக்கு மாட்டி
செத்துடானாம்
சாவு சொல்ல போரேனு
சத்தம் போட்டு போனான்

மிச்ச காப்பி கையில இருக்க
துக்கம் வந்து தொண்டையருக்க
துண்ட தூக்கி தோள்ள போட்டு
எழவு ஊட்டுக்கு
எட்டு வச்சு நடந்தேன்;
அட
பாவி பயல
பத்து நா
முன்னால
பாவ வெத வாங்கி போய்
பந்தல் கட்டி வளத்த
கொத்து கொத்தா
காச்ச செடி
கொழம்புக்கு வச்ச செடி
குடும்பத்த காக்க
கொல்லப்பட்டி சந்தையில
கொண்டு வந்து காசாக்கி
சின்ன புள்ள
செவ்வந்திக்கு
சீமந்தம் செஞ்சியே...

மழுங்கிப் போன
மண் இரும்பையும்
மம்முட்டியா செய்யுவியே!
புத்திக் கெட்ட கருவாயா?
சத்து இருக்க மட்டும்
சமாளிப்பேன்ன
பெத்த புள்ளங்கைய விட்டு
பேய் உலகம் போய்டியே?!

பச்ச பந்தலுக்கடியில
படுத்து கெடக்கிறியே
கொட்டடிச்சு
ஓஞ்சுபோய் எள்ளி,கொள்ளி
சூட்டுல தபட்ட காஞ்சும்
செம்பட்ட...

தென்னகீத்துல
தேர் செஞ்சு
ஊர் தாண்டிய
உன் நிலத்துல
உன்ன வைக்க
தடுக்கு பின்னும்
தம்பையன்...

எந்த ஊட்டு
எழவானாலும்
ஒப்பாரி பாட தப்பாம வரும்
செவலம்மா,
தாயம்மா
கெழவிக...

பெண்டு பிள்ளங்க
மாரடிக்க,
சொந்த பந்தம்
சேந்தழுவ...
குளிப்பாட்டி
உன்ன
கூடத்துல படுக்க வைக்க...

உன் அப்பனும்,
உன் மகனும்
மீசை செரைக்க...

ஒட்டு மொத்த சொந்தகளும்
உன்
உசுர சொமந்த ஒடம்ப தூக்க...
உன்ன கட்டி கதறி
அழுதா
உன்ன ஒட்டி பொறந்த பொறப்பு..

மாரடிச்சு, மாரடிச்சு
மரத்து போய்
பரனுக்கடியில
பொணமா படுத்துகெடந்த
உன்
பொண்டாட்டி
அருளு வந்த சாமி மாறி
அலகலச்சுப்புட்டா...

மாமச்சன மாறுங்க
மாலையில சோடிச்ச
பச்ச ஓல பாட தூக்க...
மொத்த ஊரும்
கூட வருது
வெட்டி வச்ச குழிய பாத்து;

வந்த சனம் அத்தனையும்
வாக்கரிசி போட,
சட்டி ஒடச்சு
சாவு சாங்கியத்த
சாஸ்தரம் மாறாம
முட்டி காலு வெட்டியான்
முணுணுத்தான்...

”மண்ணு போட போறோம்
மொகம் பாக்கரவங்க பாக்கலாம்”
பாட்டு தோணியில
பழனி கிழவன் சத்தம் போட

அது வரைக்கும்
அடங்கி கெடந்த வெசனத்த
கர ஒடஞ்ச ஏரி போல
கதறி அழுத
உங்கப்பனோட
ஊரு பூரா செந்தழுவ...
கல்லு மனசெல்லாம்
கரஞ்சு போச்சு....

ஆனா...
இப்படி
சென்ன பட்டணத்துல
செத்து போன
உன்ன
அறுத்துப் போட்டு,
ஆம்புலென்சு வண்டியில
அஞ்சாறு பேரோட
கரண்டு சுடுகாட்டுல
கறுக்கி,சுடும் போது சொன்னாங்க...
பெட்டி சாம்புலா
குறிச்ச தேதில
கொண்டுவந்து தந்துருவோம்னு
காகிதத்துல கையெழுத்து வாங்கிக்கிட்ட
கவருமெண்டு ஆளுங்க...

சொந்த மண்ணவிட்டுட்டு
வந்த மண்ணுல
வெந்து போன
உன்
சாவு சாம்பல பாக்க வந்தேன்.
சலவ கல்லு வீட்டுகுள்ள
சனங்க யாருமில்ல
அழுவ சத்தம் ஏதுமில்ல,
கேவி,கேவி அழுவாங்கனு
கேனதனமா...நெனைச்சிட்டேன்
பாவி உன்
சாவ எண்ணி
பாட்டு ஒன்னு
எழுதிட்டேன்...

1 comment:

  1. nalla varigal gramaththu ninaivugalin
    veligalin velippadu

    ReplyDelete