Friday, December 31, 2010

*மரம்.















தொப்பலாய்
நனைந்து கொண்டிருக்க
பதரியடித்து
என்
இரு கைகளை
குவித்து
குடை பிடிப்பதை கண்டு
உலுக்கி, உலுக்கி
சிரித்து விட்டு
”யாரோ ஒருவராவது
நனையாமல்
இருக்கலாம் என்று
தன்னடியில்
என்னை அழைத்தது
மழையில்
நனைந்து கொண்டிருந்த
சாலையோர
மரம்.

No comments:

Post a Comment