Wednesday, December 29, 2010

*ஒற்றை பாதை














மௌனத்திற்கு
மனு செய்யும்
நிசப்தவெளியில்
ஒளிக்கற்றைகள்
தென்னங்கீற்றிடையில்
சாறு போல
சருக்கி வர
ஈர சருகினில்
மென்மை உரசலும்
மேலோங்கி நிற்க...
இரத்த
சுத்திகரிப்பின்
சத்தம் கூட்ட
அஃறினைகள்
எல்லாம்
மௌனிகளாய்...
வேற்று கிரக
வேதனை செய்யும்
ஒற்றை பாதை
பயண இருள்

No comments:

Post a Comment