
வெரும்
குச்சியை மட்டும்
கையில் வைத்திருக்க
உருகி, உருகி
உன்
காலடியில்
இதயம்
தேங்கி நிற்கிறது
அதை
கால் விரல்களால்
தொட்டு, தொட்டு
விளையாடுகிறாய்
அதுவரை
பாதரசமாய்
உருண்டிருந்தவை
பாதம் பட்டதும்
பஞ்சை பற்றி
பதுங்கி கொள்ளும்
நீர்துளியானது
நீ
விசிறி வீசி
எரிந்து பார்க்கிறாய்
பிழிஞ்சு உதரி
உலர்த்தப் பார்க்கிறாய்
ஆனால்
உடும்பாய் தொற்றி
இறுக்கிக் கொண்டது;
மிச்ச மீதி
துளிகளை
விட்டு வைக்க கூடாதென்று
மக்கிப்போன
என்
தயக்க கடிதங்களை
நசுக்கி, உடைத்து
தூளாக்கி
துளிகளோடு சேர்த்து
கூளாக்கி
கசக்கி, பிசைந்து
பூசி மொழுகி அடைக்கிறாய்
நான்
உள்ளே நுளைந்து
உக்கார்ந்து விடுவேன்
என்று
உன்
இதய வாசலை...
No comments:
Post a Comment