
உன்
கனவுக்குள்
உலவவே
என்
கனவுகளை
தொலைக்கிறேன்...
தினம், தினம்
உன்
கனவில்
நான்
வந்ததை
கதை, கதையாய்
சொல்கிறாய்
இடை, இடையே
சில
தணிக்கை செய்த
மௌனங்கலோடு.
இடைமறித்து
கேட்டேவிட்டேன்
“ஏன்
எனக்கு மட்டும்
கனவே
வருவதில்லை” என்று?!
கண்கள் நிமிர்ந்து
கள்ள சிரிப்பை
கசக்கி எரிந்தாய்
எடுத்து பிரித்து
வாசித்தேன்
“தினமும்
என்
கனவுக்குள்
தவறாமல்
வந்துவிடும்
உனக்கு எப்படி
தனியாக
கனவு வரும்”
உன்
கனவுக்குள்
உலவவே
என்
கனவுகளை
தொலைக்கிறேன்...
No comments:
Post a Comment