
சூழ்நிலைகளே...
கொஞ்சம்
சும்மா இருந்திருந்தால்
சந்தர்பங்கள்
சாகடிக்கபடிருந்தால்
என்
சகாப்தம்
உயிர் வாழ்ந்திருக்கும்?
பூத்து
குலுங்கி
சிரித்த காதல்
காய்ந்து
சருக்காய்
காலடியிலே....
முகவரி இல்லா
கிரகம்
சென்றவளே...
என்
வீட்டு தடம் மறந்து
அலைகிறேனடி
நீ
புதைந்த
நெஞ்ச மஞ்சத்தில்
பூச்செடி முளைத்துவிட்டதடி
மலரின்
மணமெல்லாம்
உன்
பெயர் சொல்லி
அழைக்குதடி
பெண்ணே
நீயும்,
நானும்
சந்தித்தால்
நீ
நிச்சயம்
இளைத்திருப்பாய்
பேச தோன்றா
விக்கி
விழியால்
விசாரிப்போம்
நலம்
நாம் கேட்க....
"சளி" பிடிக்கும்,
கண்ணில்
"தூசு" விழும் என
நடிப்பில்...மழுபளில்
நம்
அழுகை....
உன்
குழந்தை பெயரில்
நான் ;
வரட்டுமா!
விடைபெறலில்
சில்லுகளாய்...
துகள்களாய்...
மீண்டும்
மீண்டும்
உடைபட்டு போவோம் ;

கணத்தில்
காணாமல் போகும்
உன்
விரூட்ச புன்னகையின்
விலை என்ன ?
மழையா?
இடியா?

பிள்ளைகளின்
ஏதாவது ஒரு முறை
வருகையால்...
மனித காட்சிசாலையாய் ....(மீயூசியம் )
காலாவதியாகிய
பாசம்...
நிராகரிப்புடன்
சொந்தம்...
பரிதவிப்புகளுடன்
நிறைய
வீட்டின்
முகப்பு பெயர்பலகையில்....
பெற்றவர்கள்
இயந்திரயுகம்
கொறித்து தின்றது
மனிதனை
உணர்வுகளை....

கண்மணி
உன்
கனவில்
நான்
வந்து
இன்ப தொல்லை
தருகிறேனா?
பாதி தூக்கத்தில்
விளக்கேற்றி
என்னை
தேடுகிறாயா?
என்
கனவில்...
என்
நெற்றியில் முத்தமிட்டு
இலகுவாய்
என்
கை பற்றி
அழைத்து சென்றாய்
நிலவை துரத்த..
நதிக்கரை
நிசப்த அலைவரிசையில்
புல்வெளி
வெளிச்சத்தில்
உன்
மடி மீது நான்...
உன் முகம் பார்த்து
என் கண்கள்
மொழியற்று
உரையாட
இதழ்
ஊமையாய்...
வெறித்து காண
என்
கேச இடுக்கில்
நவீன சித்திரமிடும்
உன்
விரல்கள்
என்னிடம்
கவி பா
கேட்க...
"மலரே நீ
ஒரு சோலையடி
உன்னை
செடியோடு
அடியோடு
களைந்து
என்
ஆடை மறைவில்
உள் மனதில்
தரையில்
நட்டு...
என்
நிம்மதி நீர் வார்த்து
வாடா
பூவாய்
உன்னை
வார்தேடுப்பேன்"
மற்ற நா கனவில்...
உறக்க நுளைவில்
திணித்த
என்னை
தொட்டெழுப்பி...
கால்கள்
நனையும் துரத்தில்
நாமமர...
கடற்கரை...
காற்றோடு
வீசிகொண்டிருந்தாய்
பார்வை கணைகளை
நான்
வேறு பக்கம்
என்
காட்சியை திருப்பும்
இடைவெளியில் ...
உதட்டு
சுழிப்போடு
மணல் கோலம்
நடைபெற...
வளைவு வளைவாய்
கவிதைக்கு
காரணம்
கேட்க...
"நீ
படுத்திய
காயங்களால்"
என்றேன்
காயம்
தேடினாய்
நெஞ்சு பகுதியை
என்
விழி காட்ட
உன்
செவிகொண்டு
சோதித்தாய்
துடிப்பை கணக்கிடும்
மருத்துவராய்
மயில் இறகில்
களிம்பிடும்
பதமாய்
மார்பு
மேல் புறத்தில்
இதமாய் பதித்தாய்
"இச்" சென்ற
முத்தத்தை ...
நல்லவேளை
உன்
பெயரை
சரணமிட்டதால்
சாகவில்லை
இந்த
சட்டென்ர
உதட்டு குவிப்பால்
என்னிடம்
நீ
குறும்பு செய்ய
நான்
துரத்த...
உன் ஓட்டங்கள்
கரை முழுதும்
நம் கால் தடங்கள்
துரத்தலில்
நாம்
விழ
மணர் சக்தி
நம் மீது புரள
அலை வந்து
நம்
உடுப்புகளை
நனைக்க
நீர் சொட்ட
உன்
அருகில்
நான் வர...
வெயில் பட்டு
எழுந்தேன்
அட
கனவா?
முகம் கழுவ
வெளிவர
என்
இணை வீட்டு பெண்ணே
நீயும்
வேட்கினாய்
சட்டென தெரிந்தது
இருவர் கனவுதானே!
நேற்றைய கனவில்...
யாருமில்லா
பேருந்தில்
துரத்தி ஏறினோம்
உன்
இருக்கையருகே
நான்
வர
இணையாய் அமர
விழியால்
அனுமதி கோர
நகர்ந்தாய்
வாங்கினோம்
உனக்கான
பயணசீட்டை
நானும்
எனக்கான
பயணசீட்டை
நீயும்
பத்திரபடுத்த...
உன்
கூந்தலில்
நான்
மணம் தேட
நீயோ...
"நான்
என்ன
புது தேசமா
கோலம்பசாய்
ஆராய்கிறாய் "...
நான்
"உன்
கார் கேசத்தில்
என்
சுவாசம் பட்டு
மழை தருமா"
என்றுதான்
சட்டென
சிலிர்க்க
சாரல் வர
மழையா?கேட்க
அவசரத்தில்
தலை துவட்ட
மறந்தேன் என்றாய்...
நான்...
"பெண்ணே
ஆயுள் முழுதும்
காத்திருப்பேன்
மரணம் போல்
உறுதியாய்
வருவது என்றால்"
நீ...
"இறப்பு வரை
கை கொர்த்திருப்போம்
இல்லையேல்
இறந்து இணைவோம்" ....

வரப்பு மேல
நீ
நடந்து வரும்போது
உன்
வணப்பு
என்ன
வரம்பு மீர வைக்குதடி
ஏர
அவுத்துவிட்டு
எலந்த முள்ளு காட்டுல
எறக்கி வச்ச
கூடையில இருந்து
பெசஞ்சி தருவ
ஒரு
கவளம் சோறு ...
கேலஞ்ச முடிய
கொதிவுட்டு
என்ன
கெடத்துவ
மடிமீது
விடியும் வர
தூங்கும் சொகம்...
வெட்டி வெரட்டுவ
வெடுக்கென
அந்தி
குடிசைக்கு
நான்
திரும்ப
குளிக்க வெந்தண்ணியும்,
குடிக்க கஞ்சியும்
எடுத்து வப்ப
ஈச்சம் பாயில்
கூச்சம் கொறைக்க
வேலக்கோட
என்னையும்
சேத்தணைப்ப...

பூங்காக்களில்...
திரையரங்குகளில்...
இணையாய்
அப்பாவுடன்
சென்றாலும்
திருட்டு சைகையால் காதலர்கள்
என்
மனம்
ஏங்க
எனக்கென
யாருமில்லா
தனிமையின்
நிழலில்
நான்...
என்
தேடல்
காத்திருப்பல்
கல்லூரி வாசல்
பேருந்து நிறுத்தம்
மகளிர் என்ற
தலைப்புகளை
மேய்ந்த படி...
என்
முயற்ச்சிகள் நீள...
ஒற்றையடி சாலையாய்
நகர சாலை
அவளை
அடியாளம் காட்ட
என்
காதல்
வேண்டாம்
என்றாலும்
பிடிவாதமாய்
அவள்
துப்பட்டாவில்
தொற்றிக்கொண்டு
பின் தொடர...
ஒரு
தெரு சந்திப்பில்
இருசக்கர வாகன
இளைஞனின்
சைகையில்
அவள்
பின்னால் அமர..
திடுக்கிட்ட
என்
காதல்
தட்டு தடுமாறி
எதிர்பட்ட
உலகு ரக வாகனத்தில்
அடிபட்டு
குற்றுயரும், குலையிருமாய்
என்
கவலைகிட காதல்
ஓரிரு வார
ஓய்வின் பின்
மீண்டும்
தேடலில்...
ஏன்?
இந்த பிடிவாதம்
என்றால்
கஜினி முகமதுவும்,
எட்டுமுறை விழ்தவனை
தாங்கி பிடித்த
பூமி தாய்
"நீ
ஏழுமுறை
எழுந்தவன் தானே..."
என்ற
விடா முயலுதலை
விகடமுடன்
சொல்லுது
இப்படியே
சன்னல்,
கதவிடுக்கு,
கணிபொறி வகுப்பு,
என
கணக்கெடுக்கிறது
பள்ளி ,
கல்லூரி
வாகன நேரம்
காலை,
மாலை
தவறாமல்
தேநீர் அங்காடி முன்
மர பலகையின் மீதே...
சுடிதார்,
தாவணி,
பூ மணம்,
கொலுசொலி...என
கவன
சிதறலை
தரும்
என்
காதல்
ஆனாலும்
இன்னும்
தேடலிலேயே தான்
நான்
தனிமையில்,
கற்பனையில்,
காதல்
திரைப்படங்களில்
என்
காதல்
இடத்தை
நிரப்ப
யார் யாரையோ
தேடியபடி
என்
ஒவொரு
காதலர் தினமும்
தனிமையோடே...

முக சுழிப்போடு
சலிப்பின்
விமர்சனத்தில்
சொல்லெரிகளின்
தாக்குதல்
அடையாளத்திற்கு
மட்டும்
பெயர்
நெல்மணி
கள்ளி பாலிலிருந்து
தப்பி
தாலாட்டில்
ஆறுதலோடு...
தலைபுனையாய் ...
விசன
தெளிப்பின்
மௌன வேடத்தில்...
அம்மாவின்
இன்முகம்

அவள்
நினைவுகளை
தருவிக்கின்ற தருணங்களை
என்னால்
நிராகரிக்க இயலவில்லை
தவிர்க்க
என்னில்
தகுதி இல்லை
நாங்கள்
பழகிய இடங்களை
நான்
சந்திக்க...
எங்களை
சந்தித்த சந்தர்ப்பங்களை
நான்
கடக்கையிலே...
பழகிய நாட்களின்
பரவசம்
விலகிய நாட்களின்
விம்மலின் உணர்வுகள்
கவிதையாய்...
என்
காதல்
கதவருகில் வந்து
காத்திருக்க
சன்னல்களை மேய்ந்தது
ஓர்
நரகாசூர வத நாளில்
என்
நரகத்தை வதம் செய்தால்
தடுமாறிய
தருணத்தில்
என்னை
இடறாமல்
பிடித்துக்கொண்ட
காதல்
சில்லென்ற
அவள் மொழியின்
தாக்கம்
என்னை தாகமாக்க ...
அன்று முதல்
எங்கள்
பார்வைகள் பாசாங்கிக்க
தபால்காரனாய்...
காதல்
பார்வை கடிதங்களை
மட்டும்
பண்டமாற்று செய்தது
முகவரி இல்லா
எச்சரிக்கையுடன்
அவள்
வகிடெடுத்த கேசம்
ஒட்டு பொட்டு நெற்றி
புன்னகை பூட்டிய இதழ்
எந் நகையும் வேண்டா கழுத்து
அழகாய்
பள்ளி நங்கையிலிருந்து
கல்லூரி மங்கையாய்...
நாகரீக வேடமிட்ட
நிர்பந்த பெண்ணாய்
அவள் என்னில்
வழக்கங்களை
வித்தியாசபடுத்த
நான்
பழக்கங்களை
அவளுக்கு பாதகமாக்கினேன்
நாடோடியாய்
திரிந்த
என்
நினைவுகளை
காதல் குடிசையில்
நிலைபடுத்தினால்
சூழ்நிலைகலோடு
சுற்றிய என்னை
நாகரிகமாய்
மாற்றினாள்
பார்வை நாண்களின்
பாய்ச்சலில்
ஒதுங்கி பதுங்கி
ஒளிந்து பயந்து
தவறவிட்ட தருணங்கள்
தவித்தது போதும்
புன்னகை மடலை
துணிந்து நான்
தள்ள
சிரிப்பு கடிதமாய்
அவள்
மாற்றி தர
பிரசவ குழந்தையின்
முதல் அழுகையில்
பரவசிக்கும்
தாயாய் நான்...
நாங்கள்
அருகில் சந்தித்தால்
பார்வை மட்டும்
மொழி செய்ய
வாக்கிய சத்தங்களை
முடமாக்கும்
மௌனம்
மௌன பிறப்பினால்
மொழிகளின் மரணம்
என் வார்த்தைகளை
கொறித்து தின்று
குறைத்தது
மௌனங்கள்
என் காற்றுகளின்
வடிவம் பிரல
வெறும் உலரளாய்...
அவளின்
பேசுகின்ற
மௌனத்தால்
என் பாசைகளை
இழந்தேன்
வீசுகின்ற
விழி ஓசையால்
வீழ்ந்து போனதடி
என்
வர்ணனைகள்
யதார்த்த நேரத்தில்
சாடையான பேச்சில்
கொலை செய்யும்
அவள் பாசாங்கு
என் மொழி
சுயம் இழக்கும்
அவள் வதனத்தால்
இதம் தென்றல்
வீசும்
செவ்வான சூழல்
முகம்
அவள் சிரிப்பு குருனைகளை
கொத்தி கொறிக்கும் கோழியை
நான்...
வார்த்தை நிலம்
எங்கோ இருக்க
காணல் விவசாயம் மட்டும்
என்னிடம்
அவளின் அழகை
அலங்காரம் செய்யும்
என்
வர்ணிப்பு தமிழ்
வற்றியே விடுகிறது
தலைக்கு குளித்து
நனைந்த
அவள்
கேசத்தில் சொட்டும்
துளிகளை
கையில் ஏந்தும்
என் சுகம்
அவளின்
தாவணி செருகலில்
இடையில் சிக்கும்
என் காதல்
பார்வை
சிரிப்பு
சைகை
மௌன மொழியினையே
பரிமாறிய காதல்
விழியின் விச்சிலும்
புன்னகைக்கும் இடையே
சிக்கி
சில்லுகளாய்
அவளின் கவனத்திற்காக
என்
திறமையின்
தயாரிப்பு தந்திரங்கள்
என்
கவி
ஓவியம்
என் படைப்புகளின்
முழுமை
அவளின் சாடை மாடையான
விமர்சனமே
அவள்
இயல்பின் மாற்றம் தான்
என்னில்
காதல் இயலாக மாறியது
யதார்த்த வேடமிடும்
என் காதல்
சினிமா தனமாய்
கற்பனையில்
சிலிர்த்து கொள்ளும்
என் தனிமைகள்
பெண்ணே
உன்னிடம் வசதியாக வாழ
வரம் கோரவில்லை
என் தனிமைகளை
விரட்டி
என்னில் இனிமை
செய்ய வா
என்று தானே தவம் கிடக்கிறேன்
பார்வை
சிரிப்பென
கால விரயங்கள்
சுற்று சுவர் இல்லா
அஸ்திவாரமாய்
எந்தனைய்யோ
கவி மடல்கள்
காலாவதியாகாமல்
காத்திருக்கிறது
கசங்களுடன்
பயந்து...
சரியில்லை
வேண்டா...
என
நிராகரிக்கப்பட்ட
காகித குப்பைகளிடையே
நிலவாய்
அழகாய்
மடிப்பு களையா
தொடரும் ...

என்னை பழசாறாக்கிய
பயங்கள் எல்லாம்
துணிவின் அணியில்
கை கோர்த்து
சேர்ப்பித்து விட்டது
என்
மன புலம்பலை...
என் தோழனை
காதலிக்கும்
தோழி
மூலம் விருப்புகிறேன்
என்ற
வாசகம் ஏந்திய
அவள்
விருப்ப வண்ண
அட்டையில்
கையில்...
அவளின்
சாந்தமும்
மௌனமாயின
வெறுமை
கோர்த்து வதனம்
எச்சலனமும் இன்றி...
நெற்றி
சுருக்களில் நான்
ஏன் இந்த
காலி நிலை
அசைப்போட்டுக்கொண்டு...
மிண்டும் தொடுத்தால்
சிரிப்பு செய்கைகளை
மூன்று பகல்
காத்திருந்து...
பதிலை பதுக்கி
காணலை மட்டும்
பகிர்ந்து கொண்டால்
இந்த
தவிக்கின்ற தனிமையில்...
சின்னதாய்
இருந்த இரவுகள்
மூன்று நான்காய்
விடியும் வரை
புரண்டு படுத்த
நீண்ட....
இருள்
அவளின்
கனவு கசங்களில்
நிறைவு பெறா
உறக்கம் தொலைத்த
இடைவெளிகள்...
ஒரு கணபதி சதுர்த்தி தினத்தில்
நாட்கள்
மணிகள்
நிமிடங்கள்
நொடிகள்
பின்...
என்
தவிப்புகளை
தவிர்த்த
குங்கும சஞ்சிகையின்
இடையில்
மறைந்து வந்த
பதில்
ஆங்கில வாசகம் ஏந்தி
ஐ லவ் யூ ...
கிறுக்கலுடன்
அந்த
தசாப்த
இரவில்
சூரிய,சந்திர
காட்சிகளுடன்
துள்ளலாய்...
நயாகரா நேரத்தில்
மலரில்
மண்டியிட்டு
மகரந்த
தேன் உறிஞ்சும்
என் இனிமை
புற்களின்
நுனியில் சருக்களிடும்
பனியாய்
என் துடிப்பு...
ஊமை பிரபஞ்சத்தில்
பேச்சு வந்த
பிரக்ஜையாய்...
நான்
குதுகல நாளமுடம்
புரண்டு மட்டும்
படுத்த
இரவுகள்...
சிதைந்த
என்
யதார்த்தங்கள்
தடுமாறிய
என்
வழக்கங்கள்...
அவள்
நினைவு சாயலுடன்
கைகொர்த்தவன்
நிஜமோடே....
என்
கல்லூரி பெண்ணின்
ஒவ்வொரு
அசைவுகளும்
பதிவுகளாய்....
அவளின்
சாடையான
சங்கேத மொழியும்
அர்த்தம் காண...
அவளின்
கவி
நடை தடங்களுக்கு
நான்
முன்னுரை
எழுத...
நீர் பட்ட
கொலுசொலியின்
சளி பிடித்த
சங்கீத
அடையாளம் காண...
அவள்
சின்ன சின்ன
குறும்பின் பிரயோகத்தால்
என்
தவணைமுறை
உறக்கத்தையும்
ஒருபிழப்பு செய்தால்
காதலை
பிகிர்ந்து
அவளிடம் மொழி செய்ய
முயன்ற
என்
தனிமைகள்
என்
குரல்வளையை
நெரித்த
தயக்கம்
என்
நா வை
பிரலவைத்த
தடுமாற்றம்
என்
கையாளாக
தைரியம்
தொலை பேசி
துணையில்...
தொடரும்...

இலக்க விசையை
தொடுதலில்
முன்னுரிமை
செவியை கூர்செய்யும்
பதட்டம்
அழைப்பு ஓசை
நீள......
வியர்வை வரா
உஸ்ன நிலையில்
சுரப்பிகள்
அவள்
குரல்
அடையாளம் காணலில்
சில்லிடும்
நாளம்...
முற்று பெறா
முடிக்கா
தொல்லை பேசி
தொடர்பு
இரட்டை கிழவி
அடுக்கு மொழி
வாக்கியங்கள்
என்
முன்னுரிமை
பட்டியலை
தடை போட்ட
அவள்
சொல்லிசை
என்
நினைவு புறத்தை
வெளியிட முடியா
அவள்
வாக்கிய இரம்மிய
மறதி
என்
மறதி மயக்கம்
பேச்சுகளை
முழுமையாக்க
பத்திரிக்கையாளர்
குறிப்புகளாய்
அவளிடம்
பேச
ஒரு சிறு குறிப்பு தாள்
என அடுத்த
தொடர்பில்...
சட்டையை பிடிக்கும்
தைரியம்
அவளிடம்
பெருவிரல் கோலமிடும்
பருவ பெண்ணாய்..
அரசு பள்ளி
ஆங்கில வார்த்தைக்கு
தமிழில் உச்சரிப்பு அடையாளமீடும்
மாணவனாய்...
உரையாடல்
குறிப்புடன்
என்
நெகிழ்சி
மறதிகள்
ஒரு
பாதி ஆண்டு
நீண்ட
தூரத்து உறவு...
தொலைபேசி
துண்டிப்பில்
மீண்டும்
பார்வை
சிரிப்பு
பரிமாறலில்...
வெட்டுப்பட்ட
மொழி
புதுப்பித்தலுக்கு
இரவு சந்திப்பில்...
நானும் அவளும்
வெளிச்ச சைகையினால்
எங்கள்
சந்திப்பு
நிகழ்வு... அந்த
சுகமான
நினைவினால் இன்று
சுயமோடு நான்...
இருள் வேளையில்
தசாப்த சூழல்
ஏகாந்த கண
கோர்வையில்
அவள்
நிழலின் அசைவுகளை
என் தூர பார்வை
கண்டுபிடிக்க...
தாவணி சகியின்
தழுவல் நிகழ்வின்
இரம்மியம்
ம் ம் ம் அம்மம்மா ....
தொடக்க
இரவு...
சிவப்பு சுடிதாரும்
வெள்ளை துப்பட்டாவும்
அந்தி மல்லி
கூந்தல் செடியுடன்
சில் வண்டுகளின் செவியை
பொத்தும்
கொலுசொலியோடு
துரத்து உறவு
பக்கம் வர
பதுங்கிய
என் சுயம்
அந்த
ஏகாந்த சுகத்தின்
எத்தனை
புத்தனுபவங்கள்...
அவளின்
தொடுதலின்
இரம்மியத்தில்
பியந்து போனது
உயிர்
அவள்
முகத்தில்
என்
மூச்சு பட்டு
திரும்பும் வெப்ப மாற்றம்...
அடுத்த காலை
என்னில்
தட்டுப்படும்
முக பூக்களாய்
பருக்கள்...
அந்த கருப்பு
பகலில்...
அவளின்
குண்டு கன்னங்களை
பற்றி
விழிகளின் நடனங்களை
பார்வை தூரங்களில்
காணும்
என் ஆவல்...
உடல்
சுகந்தங்களை
சேகரித்த
என்
நூரையீரல்
இன்னும்
நூகர்ந்து பார்க்கும்
பழைய
ஞாபகங்கள்...
மல்லிகை மனத்தின்
மிச்சங்களோடு
அவள்
மாலை நேர
கூந்தல்
குண்டு மல்லி பூத்த
கேச செடி
என்
மார்பில் அழுத்திய வாசம்
இன்னும் ...
பத்திரபடுத்திய
என்
சட்டையில்
சந்திப்பு முற்றும்
நேரத்தில்
வண்ணமிடா
செவ்விதழ்களின்
இடைவெளிகளில்
என்
கீழ், மேல்
உதடுகள்
இளைப்பாரி கொள்ளும்
இன்று
இந்த அனுபவ
சுகங்களின்
ஞாபகங்கள்
என்
நெஞ்சினை அழுத்தும்
பாரங்கள்
அந்த
ஏகாந்த சுகத்தில்
அவள்
உடலில்
என்
இதழ்கள்
குவித்த பாகங்களை
எழுத
என்
பேனா முனைகள்
தலை குனிவு
பெருவிரல் கோலமிடுகிறது
நாணம் வந்து...
தொடரும் ....

அவளின் கல்லூரி
வாகனத்தால்
வெளி சந்திப்புகள்
இல்லாமல் இருகிபோனது
தேர்வு
நுளைவு சீட்டின்
சாக்காய்
தனியார் பேருந்தில் ...
மூன்றால் இருக்கையில்
நானும் அவளும்
இடையில் இருக்கும்
வெட்கத்திற்கு
டிக்கெட் எடுத்த
நாணம்...
சிநேகிதம்
புடைசூழ
நடந்தேறிய
அர்த்தனாரீஸ்வர் தரிசனம்
அவளுக்கு
பொட்டிட்ட
என்
குங்கும நெற்றி...
அவள்
கூந்தலை
புதுப்பித்த
என்
கை ரோசா ..
சாப்பிடாத
அந்நாளில்
என்னை
பசியாற்றிய
அவளின்
அக்கறைகள்...
ஆப்பிள் கனியின்
எச்சில்
ருசி கண்ட
பரிமாற்றம்...
பழசாற்றில்
இரு குழல்
உறிஞ்சிய தருணங்கள்...
அவளின்
உதட்டு பக்கம்
ஒட்டிய ஐஸ் கிரீமை
சுவைத்த
என்
தனிமை...
நான்
செய்த குறும்பினால்
அவளின்
முதுகு புறம்
மாட்டிக்கொண்ட
ஐஸ் கட்டியால்
துள்ளிகுதிப்புகள்...
முதன் முதலாய்
நிரம்ப
மகிழ்ந்த நாள்...
ஒரு தமிழ் திரைப்படத்தில்
நானும் அவளும்
ஒரு இருக்கையில்
என் மடிமீது
அவளிருந்த
மறக்க முடியா
சூழல்...
திரையரங்க வெளி
எங்களை
நிழலால் இணைத்த
புகைப்படங்கள்...
கல்லூரி
இறுதிநாளில்
அவள்
நினைவு குறிப்பு நூலில்
என்
கையொப்ப கவிதை...
அவளுக்காய்
காத்திருக்கும்
ஐயங்கார் அடுமனை அங்காடி
எங்கள்
மழுப்பளால்
நிராகரிக்கப்பட்ட
அசைவ தின்பண்டம்...
நாங்கள்
பயணபட்ட
தேவி பேருந்தின்
பயண சீட்டு...
அவள்
கூந்தல் சிறையிலிருந்து
விடுபட்டு
என்
டைரி இடையில்
சிக்கிய
மரிக்காத மலர்...
அந்த
மலை கோவில்
படிக்கட்டுகளில்
ஒன்றாய்
ஏறி இறங்கிய
கை கோர்ப்புகள்...
ஒரே
கைகுட்டையில்
முகம் துடைத்த
தருணங்களை...
கைக்குட்டையை...
தொடரும் ...

என் பிறந்த நாளில்
அவள்
கொடுத்த பரிசு
அலங்காரமுடன்
என்
அலமாரியில்...
அவ் இரவில்
என்
புத்தாடையை
அவள்
உடுத்தி
பொருத்தம் சோதித்த
ஞபகங்கள்...
அன்று முதல்
எனக்கான
புதியனவற்றை
அவள்
உபயோகித்த
வழக்கங்களை...
மறக்க முயலமுடியா...
மறைவில்லா பேச்சு
வெளிப்படையான
அணுகுமுறையினால்
தம்பதிகளாய்...
சின்ன குழந்தையின்
கூட்டாஞ்சோறு
கற்பனைகள் போல
அவள்
கல்லூரி செல்லும்
விடைபெறும்...
அந்த
காலை நேர
சன்னல் பொழுதுகள்
அவளின்
விடுமுறை நாட்களில்
சன்னல் காட்சிக்காய்
காண அழைக்கும்
என்
கதவிடுக்கு
விரல் சைகைகள்
என்
அவளின்
விசாரிப்புகள்...
சாப்டாச்சா ...
எப்படி இருக்கு...
தூக்கம்வர்லயா...
இப்படியான
சன்னல்
அபிநயங்கள்
என்
உணவருந்தளில்
அவளின்
ஆ வென
வாய்திறப்பில் ...
என்னின்
தொலைதுர ஊட்டிவிடல்
அவள்
குளித்து கேச துவட்டலில்
மலர் மீது படர்ந்த
பனித்துளியாய்..
காதுமடல்களின்
ஈரங்களை
ஒற்றிஎடுப்பில்
துவண்டு விழும்
என்
மிச்சங்கள்...
இந்த
இறந்தகால
நிகழ்வால்
என்
நிழல்காலம்...
இருள்
உறவினரை
வெளிச்சம்
வழியனுப்பும்
விடியற்காலை...
நுண்ணுயிரி
நோய்க்கு அஞ்சி
வலைக்குள் சிக்கும்
காலை நேர
கொசுவலை போர்த்திய
பனி சில்லிட
இருளா?
ஒளியா?
ஒன்றையொன்று
அபகரிக்கும்
போர் சூழல்...
குளிர்ந்த நீர்
தலை குளிக்க
துவட்டல் மீதம்
பூமி பாரா
தலை சுற்றிய
டவலோடு
செவிமடல் ஓரம்
சரியும் மயிரை
கோதி விடும்
புறங்கையுடன்...
புள்ளி புள்ளியாய்
என்னை
பிரித்து கோலமாக
அவள்
இணைக்க
தப்பிதமாய் போன
கோல வரிகளால்
அவள்
அகமும் புறமும்
திட்டி சரிசெய்யும்
நிகழ்வுகளை...
நாணி வெட்கி
கதவிடுக்கில்
மறையும்
என்
கிராமத்து
பருவ பெண்ணாய்..
நான்...
என் பார்வை...
மார்கழி காலை
காத்திருக்கும்
என்
பனி நேரங்கள்
அவளும்
அவள் துப்பட்டாவும்
எனை
அணைக்க
கூதலால்
என்
குளிர்கள்
விலகி
வெரித்து பார்க்கும்
அவள்
பிறந்த நாளில்
தொடக்க நொடியில்
வாழ்த்தை பரிமாற்ற
கொட்ட கொட்ட
விழித்திருக்கும்
என்
உறக்கம்
நிசப்தமான
நடு இரவு...
என்
சன்னலோரம்
மெழுகுவர்த்தி
பிறந்தநாள் ரொட்டித்துண்டு
அவளின்
சைகை
காற்றால்
நான் ஊதியனைக்க...
சாப்பிட...
சுவைத்தாள்
முதன் முதலாய்
தனிமைபட்டேன்
அவள்
சுற்றுலா
நான்கு நாளில்
அவளை
வழியனுப்பிவிட்டு விட்டு
என்
நெஞ்சம்
காற்றடைப்புகளை
சந்திக்க...
தினமும்
அவளின்
ஒவ்வொரு நொடிகளையும்
அசைவுகளிலும்
வாழ்தவன்
சின்ன பிரிவில்
குறும் ஆட்டம் கண்டேன்
நேச தூரம்
நிர்மாணித்த
நாட்கள்
தற்கால பிரிவையே
தாங்கா மனசே
நிரந்தர பிரிவேனில்
நீ
நிச்சயம்
இறந்தே விடுவாயோ?
தற்போது
அறிந்தேன்
பிரிவுக்கு இது ஒரு
நுழைவு தேர்வென...
கல்வி நிரம்ப
கடமையை
பூர்த்தி செய்யும்
பெற்றோர்
மாப்பிள்ளை தேட...
அவள்
மறுக்க...
காரணி தேடலில்
காதல்
சிக்கிக்கொள்ள
எதிர்ப்பு குகையில் ...
பெத்தவரின்
தற்கொலை நிர்பந்தத்தால்
தைரியமற்றவலாய்
உதடுகள்
ஒப்புக்கொள்ள
தொலைந்த
சுயங்களோடும்
செத்த
உணர்வுகளும்
சேர்ந்து நடத்திய
பொம்மை திருமணம்
விட்டு விட்டு
துடித்தவை
சிதறி பறக்க ...
வாழ்வின் உச்சி நுனியில்...
குருதி நாளம்
இறுதி தாளமிட
நெஞ்சுக்குள் ஏதோ
உறைந்து போக
செத்த உணர்வோடு
நான்...
கணவனிடம்
நண்பனாய்...
அறிமுகபடுத்திய
அவளின்
கருணை கொலை
நண்பனாய்
எடுத்தெறிந்த
சொல்லில் இருந்து
என்
நினைவில் மட்டும்
அவள்
உடைத்த
மனசை
ஒன்று சேர்த்தேன்
விரிசலுக்கு
களிம்பு தடவி
வடுவாக்கினேன்
மறைந்து போக
மருந்திட மனமில்லை...
காதல்
விவாகரத்தில்
கையொப்பம் இடவித்த
பாச நிர்பந்தம்
நான்
தியாகி...
என்னில்
இருந்த அவளும்
அவளை
நேசித்த நானும்
காலமாகிவிட...
மன கண்ணீர்
அஞ்சலியோடு...
காதல்
காலாவதியாகிவிட்டாலும்
ஐஸ் கிரீம் சுவைக்க
காதை திருகும்
அம்மாவிடம்
மாட்டும்
பெப்சோடன்ட் சிறுவனாய்
குறும்புகளுடன் ...
அவள்
சிறைபடுத்தினால்
விடுவித்தாள்
அழவைத்தால்
மகிழ்வித்தாள்
தாழ்த்தினாள்
உயர்த்தினாள்
கொவபடுத்தினால்
குளிர்வித்தாள்
திட்டினாள்
திருத்தினாள்
என்
ஏற்ற இறக்கங்களை
எதுகை மோனைகளாய்
லயம் சேர்த்து
சீராக்கினால்
காதலித்து பார்
உன்னையே
உனக்கு
அறிமுக படுத்தும்
நீயெ
அறிவாய்
நிஜம் தான்;
----முற்றும் -----