
துள்ளி திரிந்த
பள்ளி
மண்ணே
போய்வரவா ...
இலை
கண்ணீரை
வடிக்கும்
இலையுதிர்
கால மரமே
போய்வரவா ...
மூத்திர வாடை
மாறாத,மறையாத
எங்கள் குப்பை சுமக்கும்
பள்ளி கிணறே
போய்வரவா ...
இன்னும் ஓய்வு பேரா
மிட்டாய் விற்கும்
பாட்டியே
போய்வரவா ...
அறிவை
புகட்டிய
அனைத்து ஆசான்களையும்
கேட்க்கிறது
கனத்த மனசு
கேட்கிறது
மீண்டும் சேர்க்க கூடாதா
மறுபடியும் பயில...
கை கோர்த்த
சிநேகம்
விளையாண்ட ...
நேசம்
என் பள்ளி
நாளை முதல்
நான் பயின்ற
பள்ளியாய் ...
No comments:
Post a Comment