
நான்
கிராமத்துக்காரன்
எனது ஊர்
சிறு கிராமம்
நாகரிக வேடமிட்டு
நாடகமாடும் ஊர்
ஏர் கலப்பையையும்
ஏற்றமும் மறந்து எந்திரத்தை
நம்பா
நம்பிக்கொண்டிருக்கும்
சின்னஞ்சிறிய கிராமம்
எஞ்சிய மக்கள்
வேலை தேடலில்
இணை ஊர்
சென்றுவிட
என்
அப்பாவின்
கத்தரி சப்தம்
என்
ஏட்டையும்,எழுதுகோலையும்
ஏலனம் செய்ய
என்னை
தொடருவது
கத்தரிகோலா இல்லை
எழுதுகோலா
அறியா பருவமாய்.... ஓட...
கிளம்பும் அவசரத்தில்
பின் குத்த மறந்த
என்
ஓட்டை டவுசரில்
தபால் போடும
இணை பையன்கள்
ஆற்றங்கரையின்
கிழக்கே
எனது ஊர்
காவேரி
எனக்கு ஏதோ
கற்றுக் கோடுக்க
முயல
சிலு சிலுக்கும்
தென்றலை
சல சலப்பின்
படபடப்பில்
காட்டிக்கொடுக்க
தென்னங்கிற்று
சைகை செய்ய ...
கால்களை
சுடும்
தார் சாலை
தண்ணீராய்
நம்
காணலை ஏமாற்றும்
கானல்
போடிசுட
தத்தியபடி
தடத்தில்
தென்றலை மறித்து
வடிகட்டி
சலித்து மணமாய்
மாற்றி அனுப்பும்
மலர் சோலை
காற்று பெண்ணுக்காக
கண்மூடி
காத்திருக்கும்
மொட்டுப் பையன்கள்
கூந்தல் வயலுக்கு
காத்திருக்கும்
மலர் நாற்றுகள்
என
இவற்றின் பக்கம்
என்
கண்கள்
பாதம் மட்டும்
பள்ளியை நோக்கியபடி...
தினம் தினம் ...
No comments:
Post a Comment