Wednesday, April 22, 2009

*தேர்தல் நேரம் ஓட்டு போடலையோ ஓட்டு...














காட்டிய

தாளிலேல்லாம்
உருட்டி ,உருட்டி
கைரேகை
தேஞ்சுபோச்சு
கேட்டு கேட்டு
தொண்டக்குழி
காஞ்சு போச்சு

மழ இல்லா
பட்ட மரம் போல
பசியால
பாதி வயிறு காயிது
மீதி வயிறு தேய்து
சிறு கொடல
பெருங் கொடலு
விழுங்குது

206 எலும்பும் எண்ண தோதா
எடுப்பா
எலும்பு கூடு ஒன்னு
முனூக்காலோட
மூனங்குல
கோவனத்தோட
ஆடு
மேய்க்க போவுது
ஆத்தங்கரைக்கு

நேத்திக்கு
கடலா
இன்னிக்கு
குட்டையா
கொரைஞ்சுகிடக்கு
ஒடைஞ்ச மண்சட்டிய
வெரைச்சு விட்டது போல
காஞ்சுகிடக்கு

மாண்ட பூண்ட
கரண்டு
திங்குதுக
மிச்ச சொச்ச
ஆடுக

தேர்தலுல
மண்டிப்போட்டு ஓட்டு
வாங்குன
மந்திரியிடம்
மனுகொடுக்க
மயான அமைதி

கோர தீக்கர கூட்டதுல
கோரிக்கையா...
மூனு வருஷம் பின்னால
முன்சீப்பு வந்து
விசாரிச்சு போனாக
வறசின்னு கண்டுபிடிக்க
வருஷம் மூணூ ஆச்சு

ஓட்டு போடாம
இருக்கலாம் ...

தேர்தல் வந்தா
புட்டி தண்ணியும்
முட்ட பிரியானியும்
மூனு வேலைக்கு தாராக

மாசம் ஒரு தேர்தல் வந்தாலும்
ஓட்டு போட
காத்து கெடக்கு
காஞ்ச சனக


No comments:

Post a Comment