Wednesday, May 18, 2011
*பொன்னுமனம்....என் கவிதை வரிகளின் பாடல் வடிவம்-2
ஆண்: பொன்னுமனம்
வீசும் எங்கள்
கழனி வயலுதான் (பொன்னு)
நெஞ்சுக்குள்ளே
சுரக்கும்
ஒரு நேச வாசம் தான்
கையும் காலும்
மூலதனம்
களத்துமேடுல ...
எங்க
வாழ்வு இங்கே
மொளைக்குதம்மா
இந்த சேத்துல
பெண் குழு: ஓ..ஓ...ஓ..ஓ...
வரப்பு விட்டு
மேலவந்தா
வடக்கு தெருவுல
பெண்: வடக்கு தெருவுல
ஆண்: காரவீட்டு திண்ணமேல
காஞ்சு கெடக்குடா
பெண்:நெல்லு காஞ்சு கெடக்குடா
ஆண்: வெரப்ப மீறி
வெளிய தெரியும்
நாத்து பயறுதான் (2 )
கொத்தும்
குருவி,சிட்டு
எல்லாம் விசிலடிக்குதே
ஒத்தையடி பாத ஓரம்
புட்டுகடையில
சிங்கபல்லு மைனருதான்
சிரிச்சு நிப்பாரு
பெண்: ஒத்தையடி பாத ஓரம்
புட்டுகடையில
சிங்கபல்லு மைனருதான்
சிரிச்சு நிப்பாரு (பொன்னுமணம்)
பெண்: ஏறபூட்டி காள ஓட்டும்
ஆச மச்சானே
ஆச மச்சானே
எழந்த முள்ளு காட்டு ஓரம்
காத்து இருக்குமே
கஞ்சி காத்து இருக்குமே
ஆண்: அறுத்து போட்ட
கதிரு தெறிக்கும்
களத்துமேட்டுல (2 )
கட்டி தூக்கி ,சொமக்கும்
எங்க காஞ்ச உடம்புதான்
ஆண்: பொள்ளாச்சி சந்தைக்கு
பறந்து போவாரு
கட்ட வண்டி
மாடு பூட்டி ரட்ட பாதையில்
பெண்: பொள்ளாச்சி சந்தைக்கு
பறந்து போவாரு
கட்ட வண்டி
மாடு பூட்டி ரட்ட பாதையில் (பொன்னுமணம்)
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment