Thursday, August 18, 2011

* ஆடிப்பெருக்கு விடுமுறை










வருத்த எள்ளும்,

வாட்டிய முந்திரி,ஏலமும்,

கருப்பட்டியும்,

கசிஞ்சு வராதளவு

கச்சிதமா தண்ணீ சேத்து...

உரலுல உலக்கைய

உறக்க இடிச்சு

உருண்டை தட்டி தரும்

எள்ளுடிக்கு எப்பவுமே

பெட்டிகட்டிவிடும்

என்

ஆடிப்பெருக்கு விடுமுறை...

* வெறகு சொமக்கும்








வேலி முள்ளு, வேலா முள்ளு,

கொக்கி முள்ளு, கொட முள்ளு,

காஞ்ச முள்ளு, காயத முள்ளு என

கவனமா வெட்டி

வெறகு சொமக்கும்

உன்னகண்டா

வெட்டி பயலுகளுக்கும்

வேலை செய்ய தோனுமடி...

Tuesday, August 16, 2011

* புரட்சிச் செய்து விரட்டட்டும்...








ஆட்டம் போடும் ஆதிக்கத்தையும்,

ஆளுமை செய்யும் முதலாளியத்தையும்

வெட்டியும், தட்டியும் வீழ்த்தட்டும்,

கத்தியும், சுத்தியும்...

புரட்சிச் செய்து விரட்டட்டும்...

பொதுவாய் நாளை மாற

புரணமைக்க

புறப்படுவோம்...

Saturday, July 2, 2011

*முகப்பரு...



















ஈரத்துணிக்குள்ளே
இருக்கி முடிஞ்ச
சோள வெத மேல
விரிசல் விட்டு
எட்டிப்பாக்கும்
வெள்ள
மொலப்பாளியா...
உன்
முத்தம் பட்டு
முட்டி பிதுங்குது
என்
முகப்பரு...

Thursday, May 26, 2011

*எச்சில் எறும்புகள் !



















உன் உதட்டு
வெடிப்பின் உள்
ஓரம் சாரத்தில்
ஒளிந்துகொண்டிருக்கிறது ,
சிவப்பு நிறம்
கலந்த
சீனியை திருடும்
என்
எச்சில் எறும்புகள் !

Wednesday, May 18, 2011

*வழி தோழி நீதானா...என் கவிதை வரிகளின் பாடல் வடிவம்-1

ஆண்:வழி தோழி நீதானா ?
விரல் தீண்டும் தீதானா? ( வழி தோழி)
மனசுக்குள் மறுகினேன்
மொழி துப்பி சிதறினேன்
நீ பட்ட எதிரிலே
திசைமாறி பூக்கிறேன்
உனை கண்ட நிழலிலே
பெண்ணே
பிழையாகிறேன்
.......வழி தோழி நீதானா?...

பெண்: ஏனடா வதைக்கிறாய்
என் மேனியை சிதைக்கிறாய்
கேளடா மௌனத்தால்
உன் ரோமத்தில் சிலிர்த்ததை
தேகம் ஏதோ வலியிலே...

ஆண்: வழி தோழி ...

ஆண்: காதலி... தனியாவோம்
ஆதமின்... கனியாவோம்
மேகத்தில்... புதைகிறோம்
நிலவின்றி... ஒளிர்கிறோம்
மோகம் இதோ நதியிலே...

பெண்: வழி தோழன் நீதானே
விரல் பற்றும் தீதானே (வழி தோழன்)
நெஞ்சுக்குள் நொறுங்கினேன்
மொழி இன்றி உளறினேன்
தீ சுட்ட இடத்திலே
தேனிட்டு பூசினேன்
உனை கண்ட நிஜத்திலே
அன்பே
சிலையாகிறேன்
வழி தோழன் நீதானே ....

*பொன்னுமனம்....என் கவிதை வரிகளின் பாடல் வடிவம்-2



ஆண்
: பொன்னுமனம்

வீசும் எங்கள்
கழனி வயலுதான் (பொன்னு)

நெஞ்சுக்குள்ளே
சுரக்கும்

ஒரு நேச வாசம் தான்
கையும் காலும்
மூலதனம்
களத்துமேடுல
...
எங்க
வாழ்வு இங்கே

மொளைக்குதம்மா
இந்த சேத்துல
பெண் குழு: ஓ..ஓ...ஓ..ஓ...

வரப்பு
விட்டு
மேலவந்தா

வடக்கு
தெருவுல

பெண்: வடக்கு தெருவுல
ஆண்: காரவீட்டு
திண்ணமேல

காஞ்சு
கெடக்குடா
பெண்:நெல்லு
காஞ்சு
கெடக்குடா

ஆண்: வெரப்ப
மீறி

வெளிய
தெரியும்
நாத்து
பயறுதான் (2 )

கொத்தும்
குருவி
,சிட்டு
எல்லாம்
விசிலடிக்குதே

ஒத்தையடி
பாத ஓரம்

புட்டுகடையில

சிங்கபல்லு
மைனருதான்

சிரிச்சு
நிப்பாரு


பெண்: ஒத்தையடி
பாத ஓரம்

புட்டுகடையில

சிங்கபல்லு
மைனருதான்

சிரிச்சு
நிப்பாரு (பொன்னுமணம்)


பெண்: ஏறபூட்டி
காள ஓட்டும்

ஆச
மச்சானே

ஆச
மச்சானே

எழந்த
முள்ளு காட்டு ஓரம்

காத்து
இருக்குமே

கஞ்சி
காத்து இருக்குமே


ஆண்: அறுத்து
போட்ட

கதிரு
தெறிக்கும்

களத்துமேட்டுல
(2 )
கட்டி
தூக்கி ,சொமக்கும்

எங்க
காஞ்ச உடம்புதான்

ஆண்: பொள்ளாச்சி சந்தைக்கு

பறந்து
போவாரு

கட்ட
வண்டி
மாடு
பூட்டி
ரட்ட பாதையில்

பெண்: பொள்ளாச்சி
சந்தைக்கு

பறந்து
போவாரு

கட்ட
வண்டி
மாடு
பூட்டி
ரட்ட பாதையில் (பொன்னுமணம்)