Friday, July 10, 2009

*வெறுமை கோட்டுக்கு கீழே...








நோஞ்சான்
காலணி பாத ரேகை
சேற்றில்
பதிந்த தாரையாய்
தரையும் ,பாதமும்
நூல் இடைவெளியில்
ஒரு காலில் பாரகான்...
ஒரு காலில் லுனார்ஸ் ...என
தரையோடு தரையாய்...

ஒழுகும் கூரையில்
நிறைய சன்னல் துளையாய் ...
ஏற்ற கதவில்லா
தைத்தும் பொத்தலோடு
வெளுத்த கந்தலோடும் ...
"மூன்று"
சாப்பாடு வேலை
அனால்
ஒன்றா? இரண்டா?
இல்லை
ஈரத்துணி கட்டிய வயிரா ?
அறுதியிட முடியா!
பஞ்ச கணங்கள்
நாளையே வசிப்பிடம்
உறுதி செய்யும்
மழைக்கு
ஒதுங்கும்
ஒண்டும் சிரமம்
பொழுது புலர்ந்தால்
திசைகள்
தேடும் பிழைப்பில்
நாடோடி தனங்கள்

பேருந்து நிலையம், நிறுத்தம்
கோவில் முகப்பு ...
அம்மா... தாயே ...
நம்
காதுகளையும்
அடைக்கும் பட்டினி மொழி ;
நம்
ஆடம்பர பாதியை
தந்தாள் எத்தனையோ
அத்தியாவசியங்கள்...
முழுமை பெரும்;




2 comments:

  1. varumayin niram kodiyathu,,,,, athai vivarikka vaarthai illai,,,,, irunthum unggal varikalail karuthukkalukku panjamillamal alakaka vadithirukeengala,,,,,,


    elmayai patriya kavithaiyil ..... panjamillatha karutthukkal,,,,


    vaaltukkal thodarungal,,,,,,

    ReplyDelete
  2. தந்தாள் - தந்தால்
    அனால் - ஆனால்
    பிழைகளை திருத்தி கொள்ளவும்.

    ReplyDelete